Skip to main content

எய்டன் மார்க்ரம் விஷயத்தில் பொறுமையாக இருங்கள்: விராட் கோலி ஆதரவுக் குரல்

இளம் அணித் தலைவர்கள் என்று வரும்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கும் விராட் கோலியைத் தவிர வேற யாருக்கும் அது பற்றி நன்றாகத் தெரிந்திருக்காது.

எய்டென் மார்க்ரம் இளம் அணித்தலைவராக தொடர தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் நினைக்கவேண்டும் என்றும், நல்ல தலைவருக்குத் தேவையான பண்புகள் அவரிடம் உள்ளன என்றும் கோலி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-5 என்ற கணக்கில் தொடரை இழந்தது. தாய்மண்ணில் இந்திய அணிக்கு எதிராக அவர்கள் இழக்கும் முதல் ஒருநாள் தொடர் இது முதல் ஒருநாள் போட்டியில் ஃபாப் டூ ப்ளெஸ்ஸி அணித் தலைராக இருந்தார்ஆனால் காயம் காரணமாக அவர் விளையாட முடியாமல் போனதால் மார்க்ரம் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

மார்க்ரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணித் தலைவர் விராட் கோலி அவர் மாகாண கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்திருக்கிறார் ஜூனியர் அண்டர் 19 அணிக்கும் தலைவராக இருந்து உலகக் கோப்பையை வென்றி ருக்கிறார் அவரிடத்தில் பொறுமை காட்டுங்கள் என்றே நான் சொல்வேன் ஏனென்றால் அவர் தான் உங்கள் அணியின் அடுத்த தலைவர். மிகச்சிறந்த பேட்ஸ்மேனும்கூட அவர் ஆடுவதைப் பார்ப்பதே அலாதியாக இருக்கும்.

ஒரு பேட்ஸ்மேனாக ஆதிக்கம் செலுத்தும் திறமை அவருக்குக் கண்டிப்பாக இருக்கிறது அணித்தலைவராக களத்தில் ஆதிக்கம் செலுத்தும் சரியான மனநிலையும் அவரிடத்தில் இருக்கிறது. அவருக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. அவரது நிலையை என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடிகிறது ஏனென்றால் நானும் அந்த நிலையில் இருந்திருக்கிறேன் அவர் சரியான பாதையில் இருக்கிறார் என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.

அணித் தலைமை எளிதான விஷயமல்ல அது எனக்குத் தெரியும். அதிலும் அணி தோல்வியடையும்போது இன்னும் கடினம் அவரது பேட்டிங் என்னை ஈர்த்தது. அணித் தலைவராகவும் அவர் களத்தில் பதட்டமின்றி பொறுமையாக இருந்ததை நான் பார்த்தி ருக்கிறேன்.

நினைத்தது எதுவும் நடக்காத போது அந்த நிலையைக் கையாள்வது எளிதான காரியமல்ல. ஆனால் மார்க்ரம் பொறுமையை இழப்பவரல்ல அது மிகச்சிறந்த நேர்மறையான விஷயம் என நான் நினைக்கிறேன என்று முடித்தார் கோலி.

Comments

Popular posts from this blog

மனைவி அனுஷ்காவால் ஊக்குவிக்கப்பட்டேன்: விராட் கோலி

விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்துக்கு மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று புகழ்ந்துள்ளார்இ து தொடர்பாக அவர் கூறியதாவதுரசிகர்களின் ஆதரவு இல்லையென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது எனது மனைவியும் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் என்னை ஊக்கப்படுத்தினார் இதுவும் வெற்றிக்கு காரணமாக இருந்தது இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் கடந்த. காலங்களில் அவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் ஆனால் தற்போது எனது மேம்பட்ட ஆட்டத்துக்கு அவர்தான் காரண மாக இருந்தார்இவ்வாறு கோலி கூறினார் கோலி சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்னை வேகமாக தொட்டு சாதனை படைத்தார் இதே போல ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 9 500 ரன்னை எடுத்து டிவில்லியர்சை முந்தினார்.

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள்! நடந்தது என்ன?

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள் நடந்தது என்னஇத்தொடரின் துவக்கத்தில் தென்ஆப்ரிக்க நிறுவனம் வழங்கிய உணவு பிடிக்கவில்லை என இந்திய வீரர்கள் தெரிவித்து அங்குள்ள இந்திய நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நிறுவனம் சார்பில் கூறுகையில்,’இலங்கை வங்கதேச அணிகள் இங்குவந்த போது அவர்களுக்கும் நாங்கள் தான் உணவு வழங்கினோம் அவர்கள் எவ்வித பிரச்சனையும் தெரிவிக்கவில்லை ஆனால் வீட்டு உணவு போல வேணும் என கேட்ட ஒரே அணி இந்திய அணி மட்டும் தான் என்ற.